Monday, April 30, 2018

பாம்பு புற்றிலிருந்து சுயமாக தோன்றிய சிவலிங்கம்!

  Editor       Monday, April 30, 2018
வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சித்ரா பௌர்ணமி சிறப்புப் பூஜை சிறப்பாக நடைபெற்றது.



இதற்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகைத்தந்திருந்தனர்.

சித்ராபௌர்ணமி பூஜைக்கு முன்பாக பாம்பு புற்றிலிருந்து சுயமாக முளைத்த சிவலிங்கத்திற்கு பூ சொரியும் நிகழ்வு நடைபெற்றது. அதற்கு வழமையை விட பக்தர்கள் முண்டியடித்து வந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, கல்முனை மாநகர பிரதி மேயர் காத்தமுத்துகணேஸ், காரைதீவு பிரதேசசபைபயின் தவிசாளர் கி.ஜெயசிறில், சம்மாந்துறை பிரதேசசபையின் பிரதி தவிசாளர் வி.ஜெயச்சந்திரன், காரைதீவு பிரதேசசபை உறுப்பினர்களான பி.மோகனதாஸ் மு.காண்டீபன் சி.ஜெயராணி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்பாறை மாவட்ட ஆலயங்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெற்று, சித்திரகுப்தனாரின் சரிதம் பாடப்பட்டு சித்திரைக் கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
logoblog

#hashtag

Thanks for reading பாம்பு புற்றிலிருந்து சுயமாக தோன்றிய சிவலிங்கம்!

No comments:
Previous
« Prev Post