Thursday, May 3, 2018

கனடாவில் ஈழத்து தமிழ் மாணவி ஒருவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

  Editor       Thursday, May 3, 2018
கனடா நாட்டில் வசிக்கும் ஈழத்து மாணவி ஒருவர் Queen’s University Accelerated Route to Medical School (QuARMS) என்கின்ற மருத்துவ படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500க்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த துறைக்கு விண்ணப்பிப்பார்கள். அதில் 10 பேர் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவர்.

அந்த 10 பேர்களில் ஒருவராக ஈழத்தை சேர்ந்த மாணவியான விதுசா யோகதாசன் என்பவர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது ஈழத் தமிழர்களாகிய எமக்கு பெருமை சேர்ப்பதாகும்.

இந்த மருத்துவப்படிப்பிற்கு எற்றுக்கொள்ள உயர்நிலை பள்ளியில் எடுக்கப்படும் அதி உச்ச மதிப்பெண்கள் மட்டும் பெற்றிருந்தால் போதாது. இதர பாடத் திட்டங்கள் சாராத செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்க வேண்டும் (Extra curricular activities)

சாதாரணமாக 4-5 வருடங்கள் இளங்கலை (undergraduate) படித்து விட்டு தான் மருத்துவத்துறைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், இந்த QuARMS ஊடாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் 2 வருட இளங்கலை படித்து விட்டு நேரடியாக கனடாவின் பிரசித்தி பெற்ற மருத்துவத்துறைக்கு செல்ல முடியும்.

இதேவேளை, கனடாவில் மருத்துவத்துறைக்கு மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது Queen’s பல்கலைக்கழகம் ஆகும்.
logoblog

#hashtag

Thanks for reading கனடாவில் ஈழத்து தமிழ் மாணவி ஒருவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

No comments:
Previous
« Prev Post