Wednesday, May 9, 2018

இம்மண்ணை ஆண்ட தமிழன் கதை தெரியும்..!! விண்ணை ஆண்ட கதை தெரியுமா உங்களுக்கு..?!

  Editor       Wednesday, May 9, 2018
விண்வெளியைப் பற்றி, சங்க காலத்தில் கூறப்பட்டிருக்கிறதா?

தற்போது பூமியில் மனிதர்களாகிய நாம் வாழ்ந்தாலும், வானில் உள்ள கிரகங்கள் பற்றிய தெளிவு இன்னும் சரிவர புரியாமல் தான் இருக்கிறது. தொடர்ந்து ராக்கெட்டுகள் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருந்தாலும், நாம் இன்று சாதாரணமாக கண்ணில் நட்சத்திரமாகத் தெரியும் கிரகங்கள் எல்லாம், கோடிக் கணக்கான, விண்வெளி மைல் துாரத்தில் அமைந்துள்ளன.



இவற்றுக்குச் சென்று விடலாம், என்று எளிதாகக் கூறி விட முடியாது. ஏனெனில், அந்த கிரகங்களுக்கு எல்லாம், ராக்கெட்டில் சென்றால் கூட, 100 வருடங்களுக்கு மேல் ஆகி விடும். அந்த அளவிற்கு, எரிபொருளை ராக்கெட்டில் நிரப்ப இயலாது.



அந்த அளவு துாரத்திற்குச் செல்ல காலமும் போதாது. இப்படிப்பட்ட விண்வெளி ரகசியங்கள் ஏராளமாக உள்ளன. நிலவிலும், செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் கால் பதித்து விட்டனர்.


இந்த கிரகங்களைப் பற்றி ஆய்வில், 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, நம் தமிழர்கள் இறங்கி இருக்கிறார்கள். அறிவியலும், விஞ்ஞான தொழில் நுட்பம் ஏதுமற்ற அந்தக் காலத்தில், சலனமில்லாத குளத்தில் தெரியும், கிரகங்களின் பிம்பத்தை வைத்து, அதன் துாரத்தைக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

ஆர்யபட்டர், நிலவினைக் குளத்தில் பார்த்து, தோரயமாக, அதன் துாரத்தைக் கணக்கிட்டுச் சொன்னார். இருபதாம் நுாற்றாண்டில், நிலவிற்கு மனிதன் சென்ற போது, இந்த துாரத்தையும், நாசாவிலிருந்து, செல்லும் தொலைவினையும் கணக்கிட்டுப் பார்த்த போது, வித்தியாசம் சிறிய அளவில் தான் இருந்தது, என்பது ஆச்சர்யப் படுத்துகிறது.

அந்த அளவிற்கு, மதி நுட்பம் வாய்ந்தவர்கள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள். தற்போதுள்ள வசதிகள் ஏதும், அந்தக் காலத்தில் இருந்தால், நிச்சயம், தற்போதுள்ள மனிதர்களை விட நிச்சயம், அதிக அளவில் சாதித்திருப்பார்கள், என்றே, அறிவியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
logoblog

#hashtag

Thanks for reading இம்மண்ணை ஆண்ட தமிழன் கதை தெரியும்..!! விண்ணை ஆண்ட கதை தெரியுமா உங்களுக்கு..?!

No comments:
Previous
« Prev Post